புதன், 24 ஆகஸ்ட், 2011

யுவன் ஆல்பம்


உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்
நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்………..
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

வரிகள்- நா.முத்துகுமார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக